26 பிப்ரவரி, 2009

இலங்கை தமிழர் விவகாரத்தில் கொஞ்சம் தெளிவு மற்றும் நிதானம் தேவை

தலைப்புகளிலேயே பகிரங்கமாக இந்தியாவை அவமானப் படுத்தி எழுதுவது கூடாது

பிரிவினை வாதங்களை முன்வைத்து ஒன்றுபட்ட இந்தியாவின் ஒற்றுமையை குலைக்கும் கருத்துகளை பரப்புவது கூடாது
தமிழ்நாட்டில் அரசியல் மற்றும் அதன் தலைவர்களிடையே குழப்பங்களை சீண்டிவிடும் வகையில் எழுதுவது கூடாது
இலகில் உணர்ச்சி வசப்படும் தமிழனின் பலவீனத்தை மூலதனமாக வைத்து குழப்பங்கள் உருவாக்கும் எண்ணத்தில் எழுதுவதும் கூடாது
இலங்கை விவகாரம் பற்றி இந்தியன் எனும் பார்வையுடன் பிரச்சினைகளை அனுகும்போது, இந்தியாவின் தெற்காசிய வல்லமையை உடைக்க இதன் இரண்டு பெரிய முக்கிய எதிரிகளான‌ சீனா மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளும் இலங்கையை பகடைக் காயாக உருட்டி விளையாடுவதை கருத்திற் கொண்டே சிந்தித்து எழுத‌ வேண்டும்.
தமிழன் என கூறிக்கொண்டு, தமிழன் தோல் போற்றிய‌ சிங்கள, பாக்கிஸ்தானிய, சீன போலிகள் மற்றும் அரசியல் ஆதாயம் தேடி உலறிக்கொட்டும் சில உள்நாட்டு எதிர் கட்சியினர் இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளை மூலதனமாக வைத்து பித்தலாட்டம் செய்வதை இனம் கண்டுகொள்ள தெரியவும் வேண்டும்.
இந்திய இறையாண்மைக்கும் அதன் ஒற்றுமைக்கும் பங்கம் விளைவிக்க தூண்டும் அனைத்துவித ஆக்கங்களையும் வலையில் இருந்து நீக்கி அழித்துவிட பொறுப்புள்ள நிர்வாகத்தினர்களுக்கு உடனுக்குடன் பிராது கொடுக்கவும் வேண்டும்.
வாழ்க வளர்க உலகின் ஒரே உன்னத ஜனநாயக இந்தியா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக