26 பிப்ரவரி, 2007

பறவைக்கு மூளை பெருசு = உயிர் வாழ்வதும் எளிது.

பறவைகள் இனத்தில், மூளை எந்த அளவுக்கு பெரியதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அவைகள் உயிர் வாழும் திறமையும் அதிகம். இவைகளின் மூளை உடல் அளவிற்கு ஈடாக எந்த அளவிற்கு பெரிதாக இருக்கிறதோ அப்பறவைகள் கால மாற்றங்களுக்கு தகுந்தாற்போல் தங்கள் பழக்க வழக்கங்களை மாற்றிக்கொண்டு சமாளித்து திறமையுடன் உயிர் வாழ்கின்றன என ஒரு ஆய்வு கூறுகிறது. உலகம் முழுதிலும் இருந்து 200 வகை பறவைகளை ஆராய்ந்து பார்த்ததிலிருந்து இந்த உண்மை தெரியவருகிறது. சுற்றுப்புற சூழ்நிலை, தட்ப வெப்ப நிலை ஆகியவைகள் மாறி வரும் இந்த காலங்களில் பெரிய தலை உடைய பறவைகளே தாக்குப் பிடித்து உயிர் வாழ்கின்றனவாம்.
ஆராய்ச்சியாளர்கள் மேலும் கூறுவது // கெட்ட காலத்தை நோக்கி போய் கொண்டிருக்கும் இந்த மாறிவரும் உலகில், பறவைகளைப் போலவே மனிதனும் தன் மூளையை வளர்த்துக் கொள்ளவேண்டியது அவசியமாம்.
Proceedings of the Royal Society B: Biological Sciences
ஆதாரம் - Sciences et avenir.

13 கருத்துகள்:

  1. நூதனமா வேற எதுவும் செய்தி இல்லாததால் இந்த பதிவை சும்மா போட்டு வெச்சேன்.

    ஆராய்ச்சியாளர்கள் சொல்றத கவனித்தீர்களா? மனிதனும் மூளையை பெருசா வளர்த்து கொள்ளனுமாம். அவங்க சொல்லாம விட்டது : நகரத்தில் வாழ்கிற மனிதன் அப்படீன்றதை...

    பதிலளிநீக்கு
  2. உங்கள் பதிவை நெருப்பு நரி உலாவியில் படிக்க முடியவில்லை. பதிவின் அலைன்மெண்டை ஜஸ்டிபைட் இல்லாமல் லெப்ட் அலைண்டாக மாற்றினால் சரியாகத் தெரியும். செய்யுங்களேன்.

    பதிலளிநீக்கு
  3. மாசிலா, பறைவைகளின் உணர்ச்சிகளும் அரிதானவை. அவைகளுக்கு கோபம், சோகம், உற்சாகம், குறும்பு எல்லாமே உண்டு.

    பதிலளிநீக்கு
  4. அய்யய்யோ!
    இலவசக்கொத்தனார் என்னாங்க இப்படி செய்ய சொல்லறீங்களே! நானே எவ்வளவு சிரமப்பட்டு...
    சரி பரவாயில்ல,
    உங்களுக்காக.

    பதிலளிநீக்கு
  5. கால்கரி சிவா // மாசிலா, பறைவைகளின் உணர்ச்சிகளும் அரிதானவை. அவைகளுக்கு கோபம், சோகம், உற்சாகம், குறும்பு எல்லாமே உண்டு.//
    நிச்சயமாக கால்கரி சிவா. இந்த அவசர உலகில் நமக்குத்தான் அதை இரசிக்க தெரியலை. நேரமும் இல்லை. என்ன நான் சொல்வது?

    பதிலளிநீக்கு
  6. நீண்ட நாட்களுக்கு பிறகு இப்போதான் பின்னூட்டங்களை திரட்ட வசதி செய்திருக்காங்க தமிழ்மணம். அது ஒழுங்கா வேலை செய்யுதா என பார்க்கவே இந்த என் பின்னூட்டம்.
    ஹி!ஹி!

    இலவசக்கொத்தனார், கால்கரி சிவா உங்களது வருகைக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  7. tamil fonts eppidi??
    therila?/ na puthusu athan help me plz
    and then moderator on panitten nandri

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் பத்மா.

    வாங்க வாங்க.

    தமிழில் எழுத இங்கே போங்க
    http://tamilblogging.blogspot.com/2006/12/how-to-readwrite-in-tamil.html

    நல்ல விளக்கமா சொல்லி இருக்காங்க.

    வாழ்த்துக்கள்.

    பிறகு தமிழ்மணத்தில் பதிந்து உங்கள மாதிரி உள்ள சகோதரிங்க போல உங்கள் கருத்தை தமிழிலேயே எழுதுங்க.

    பிரச்சினை வந்தா எனக்கு மின்னஞ்சல் செய்ய தயங்காதீங்க.

    மாசிலா

    பதிலளிநீக்கு
  9. மாசிலா!
    பறவைக்கு மூளை பெரிதா இருந்தால் வாழ்வது எளிது ; நம்மைப் போல மனிதனுக்கு மூளை இருந்தாலே வாழ்வது எளிதுங்க.
    இந்த மனிதன் இவற்றை வாழ விடவேண்டுமே!
    எனினும் தகவலுக்கு நன்றி!!

    பதிலளிநீக்கு
  10. யோகன் பாரிஸ்(Johan-Paris)// இந்த மனிதன் இவற்றை வாழ விடவேண்டுமே!//

    வாங்க வாங்க யோகன் பாரிஸ்.
    முதல் வணக்கம்.

    நீங்க கூறியிருக்கிற மாதிரி,
    இயற்கையோடு இயற்கையாக வாழத்தெரியாத மனிதன் அனைத்தையும் அடக்கி ஆளவேண்டும் என்கிற வெறியில் இப்பூமியை கெடுத்து... சரி விடுங்கள். மனதுதான் நோகிறது. நல்லனவற்றை இனி பூதக்கண்ணாடி கொண்டுதான் தேடவேண்டும். நம்மால் முடிந்தவரை நாம் ஒவ்வொருவரும் நல்லவராக இருக்க முயற்சி செய்வோம்.

    உங்கள் கருத்திற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா1/3/07, 10:35 AM

    டெஸ்ட் மெஸ்ஸேஜ்!

    பதிலளிநீக்கு
  12. சோதனை பின்னூட்டம்

    பதிலளிநீக்கு